என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
நீங்கள் தேடியது "பெண்கள் சாமி ஆடுதல்"
ஆரணி:
ஆரணிஅடுத்த பையூர் கிராமத்தில் அ.தி.மு.க. 47-வது ஆண்டு பொது கூட்டம் நடைபெற்றது. ஓன்றியசெயலாளர் சேகர் முன்னிலை வகித்தார். முன்னாள் ஊராட்சிமன்ற தலைவர் வரவேற்றார். மாவட்ட துணை செயலாளர் கருணாகரன் தலைமை தாங்கினார்.
சிறப்பு அழைப்பாளராக இந்துசமய அறநிலையத் துறை அமைச்சர் சேவூர் ராமசந்திரன் பங்கேற்றார்.
மேலும் பொதுக் கூட்டத்தில் பேசிய பேச்சாளர் விழுப்புரம் செல்வராஜ் அரசின் திட்டங்கள் பற்றிபேசும் போது இசையுடன் திடீரென மேல்மலையனுர் அங்காளம்மன் பாடலை பாடினார்.
அப்போது பொதுக் கூட்டத்தில் அதிகளவில் இருந்த பெண்கள் கூட்டத்தில் ஓரு சில பெண்கள் சாமி ஆடி பரவசம் அடைந்தனர்.
இதனால் அ.தி.மு.க. பொதுக்கூட்டம் பக்தி கூட்டமாக மாறியது. அமைச்சர் சேவூர் ராமசந்திரன் முன்னிலையில் அ.தி.மு.க. பொதுக் கூட்டத்தில் பெண்கள் பக்தி பாடலுக்கு சாமி ஆடியதால் பரபரப்பு ஏற்பட்டது. சம்பவத்தை பொதுமக்கள் ஆச்சரியத்துடன் கண்டு களித்தனர்.
இந்நிகழ்ச்சியில் மாவட்ட செயலாளர் தூசிமோகன் நகரபேரவைசெயலாளார் பாலாஜிபாபு, வழக்கறிஞர் சங்கர் உள்பட பலர் கலந்து கொண்டனர். #admk #spiritualdance
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்